நேத்திக்கு எம் பொண்டாட்டி என்ன அட்ச்சிட்டா.
இன்னாடா இவன் இதப்போயி இன்னா தேரியமான வலப்பத்திவுள போட்ரானேன்னு பாக்றீங்கோ நீங்கோ. இன்னா தப்பு இதல? அட்சது எம் பொண்டாட்டி. அட்சது என்ன.
இன்னார் இன்னார அட்சாங்கன்னா பின்னால கத இருக்குமில்ல? அது இன்னா மேட்ருன்னு கேளுங்க. நேத்து காலீல வேலிக்கு போவும் போது, இன்னிக்கு சாந்தரம் குடிக்காம வூட்டுக்கு வரேன்னு எம்பொண்டாட்டிக்கிட்ட நேத்து சத்தியம் பண்ணிட்டேன்.
இன்னாமே, நெஜமாலும் உன்னால முடியுமான்னு கேட்டா. ஆம்புள வுடுவனா. முடியும்மே, முடியும். இல்லன்னா நீ இன்னா சொல்றியோ அதே செய்றேன் அப்படின்னு சவாலு வுட்டேன். நாந் தெனங்குடிக்கிற தறுதல.
சாந்தரம் ஆச்சு. இன்னா இருந்தாலும் இன்னிக்கு குடிக்காம போறமே, நம்ல வூட்டுக்காரி மர்வாதையா வாவான்னு சொல்வான்னு நன்ச்சேன். பலானது இன்னிக்கு நல்லா நடக்கும்னு ஆசப்பட்டு, பூ வாங்கினு போலாம்னு நனச்சேன். போற வழில எனக்கு தெரிஞ்ச பூக்காரி – சாமந்தின்னு பேரு – ஒர்த்தி இருக்கா, அவகிட்ட மல்லிப்பூவு வாங்க போனன். ரொம்ப அயகு அந்த பொண்ணு. போம்போது வர்ம்போது ஒரு லுக்கு வுடுவா. சின்னப்பொண்ணு. நல்லா யாவரம் பண்ணுவா.
மல்லிப்பூ கேட்டேன். ஏந்.. தட்ட பாரன். மல்லி இல்லியேன்னா. இது இன்னாடா எழவுன்னு, சரி கெடக்டும் விடு, அது இல்லீன்னா இன்னா, வேற பூவு குடுன்னுபூக்காரி சாமந்தி கிட்டே கேட்டேன். அவோ சாமந்தி பூதான் கீது அப்டின்னா. இன்னா பண்றது? சரி வாங்கலாம்னு பூக்காரிககிட்டே, இன்னா வெலன்னு கேட்டேன். ரொம்ப அதிகமில்ல, உனக்குன்னா கால்ரூபா மொழத்துக்கு கம்மின்னு சொன்னா. இன்னா ஷோக்கா பேசுவா
தெர்யுமா அவ? பூக்காரி மேல எனக்கும் ஒரு இதுதான். இன்னா மேட்டருன்னு கேட்காதிங்க சார். சும்மா ஒரு லுக்குதான்.
அன்னிக்கும் கொஞ்சநேரம் ஜொள்ளு வுட்டுட்டு பூவு வாங்கினு ஊட்டுக்கு கெளம்புனேன்.
போறேய்லோ, பூவு மட்டும் போதுமா, சுவீட்டு வாங்கலாமேன்னு நெனச்சேன். இன்னா சுவீட்டு எம் பொண்டாட்டிக்கு புடிக்கும்னே
இது வரே தெரியாது. இன்னாடா வூட்டுக்காரன் இவன்னு நீங்க கேக்கலாம். ஒம்பொண்டாட்டிக்கு இன்னா சீரியல் புடிக்கும்னு ஒங்கலால சொல்லமுடியும். கேய்வி இன்னான்னா, அவங்குளுக்கு எந்த பக்கத்து வூட்டுக்காரன புடிக்கும்னு ஒங்களால சொல்லமுடியுமா. இன்னா இர்ந்தாலும் முட்யாது.
சரி, சுவீட்டு வாங்க போனனா, அங்க இன்னாடான்னா, இன்னாத்த சொல்றது, இன்னோரு பிரச்னை. நான் ஜாங்கிரி வாங்க போனன். கடக்காரன் இன்னா கேக்கிறான்னா, எந்த காலத்துல கீற நீ, பெங்காலி சுவீட்டு வாங்கிகினு போன்னு கேக்கறான். பெங்காலி சுவீட்டா, அது இன்னான்னே எனக்கு தெரியாது. காக்கிலோ இன்னா ஆவுதுன்னு கேட்டேன். காக்கிலோ காக்காவுக்கு கூட பத்தாது, இன்னா கேட்டியா, அரக்கிலோ வாங்கிக்கோன்னான். சரி, இன்னா வெல அத சொல்லு முதல்லன்னேன். இன்னா இர்ந்தாலும் நம்க்கு கட்டுபடி ஆவணும் இல்லியா? நூர்ரூவான்னான். இன்னாது? ஒரு பச்ச நோட்டு அப்படி புடுங்கறானேன்னு நனச்சேன். சரி நம்ம, அடச்சீ, என் பொண்டாட்டிக்கு தான வாங்கிட்டு போறோம்னு, முழு அம்பது ரூவா நோட்டு ரெண்டு குடுத்து வாங்கனேன்.
வழிலே இன்னாசி அண்ணன பாத்தேன். இன்னாடா பூவும் சுவீட்டுமா போறே, இன்னா விசேஷம்டான்னாரு. இன்னிக்கு குடிக்காம வூட்டுக்கு போறேன், இன்னாசி அண்ணேன்னேன். இன்னாப்பா இது, எப்டி இது முடிஞ்சுதுன்னு அண்ணன் விலாவரியா கேட்கிறாரு. இன்னா சொன்னாலும் நம்பமாட்டேன், வாய வூதுன்னாரு. வூதுனேன். உம்மைதான் போலக்கீதுன்னு சொல்லிட்டு அண்ணன் பூட்டாரு.
வூட்டுக்கு போனன். பொண்டாட்டி ஆளக்காணோம். இன்னாடாது, சவால் வுட்ட புர்சன் வர நேரம் பாத்து வெளியப் பூட்டாளேன்னு நான் பாக்கிறேன். அப்போ இன்னா நடந்தது தெரியுமா? நான் பூ வாங்கினத அவளும் பாத்துட்டா போலக்கீது. நானும் பூக்காரியும் வாய்வுட்டு பேசனத அவ தூரத்திலேந்து பாத்து கெட்ட மாரியா நன்ச்சிகினா போலக்கீது. இதெல்லாம் எனக்கு மொதல்ல தெரியாது.
நான் வந்து வூட்ல போய் ஒக்காந்துகினு இருந்தன். அவ வர்ரது தெரிஞ்சிது. தெருவுல இருந்துகினே கத்திகினே வூட்ல நொழஞ்சா அந்த ராட்சதி.
“டேய் வெக்கங்கெட்டவனே, இன்னாடா நெனப்பு ஒம்மனசில” ன்னு ஆரம்பிச்சா. எனக்கு தூக்கிபோட்சி. இன்னா ஆச்சி இவுளுக்குன்னு. ஆம்புளங்கிறத்தனாலா, கோவமாயிட்டேன். அவ உடல. “இன்னாத்தடா பண்ற உள்ளே”ன்னு அப்புறம் கத்துனா.
நானு வெவரம் புரியாம கையல பூவோடு போய் நின்னன். கிட்ட வந்து, “இன்னா பூவு இது, எனக்கு மல்லிப்பூவுதானே புடிக்கும். உனக்கு தெர்யாதா”ன்னு கேட்டா. இன்னாடா, ஆம்பிளிகிட்டே சர்க்குசமமா பேசறாளேன்னு. “இல்ல, எனக்கு சாமந்திதான் புடிக்கும்னு” ஒளறிட்டேன்.
அவ்ளோதான். அப்புறம், இன்னா நடந்திருக்கும்னு உங்ளுக்கு தெரியாதா இன்னா?.
குறிப்பு: இதே மாதிரி ஒரு இலக்கியத்தை ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி குமுதத்திலோ விகடனிலோ படித்ததாக ஞாபகம். அதை எழுதிய எழுத்தாளருக்கு இது சமர்ப்பணம். ஆனால் இதில் எழுதியிருக்கிற சரக்கு எல்லாம் 100 சதம் என்னுடையதே.