அன்பு நண்பர்களே,
யுனெஸ்கோ நிறுவனம் 1998 இலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதியை சர்வதேச தாய்மொழிகள் நாளாக கொண்டாடிவருகிறது.
அதை முன்னிட்டு, நாளை (பிப்ரவரி 21, வியாழக்கிழமை) சென்னையில் நாங்கள் ஒரு சிறு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். மொழியை அடிப்படையாகக் கொண்டு பணிபுரியம் இதழாளர்கள், எழுத்தாளர்கள், மொழியியலாளர்கள், பதிப்பாளர்கள் போன்றோர் மொழி வளர்ச்சிக்கு என்ன செய்யமுடியும் என்பது குறித்த ஒரு வெளிப்படையான விவாதமாக அது இருக்கும்.
நாளை மாலை 5:30 மணிக்கு, சாஃப்ட்வியூ விஷுவல் கம்யூனிகேஷன் – ஜர்னலிசம் இன்ஸ்ட்டியூட், 117, நெல்சன் மாணிக்கம் சாலை, சூளை மேடு என்ற முகவரியில் இந்த கலந்துரையாடல் நிகழவிருக்கிறது.
நீங்களும் இதில் கலந்துகொண்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.
99401 47473 என்ற எண்ணில் என்னைத் தொடர்புகொண்டு உடனே சந்திப்புக்காக பதிவு செய்துகொள்ளுங்கள்.
அன்புடன்
செ.ச.செந்தில்நாதன்
பதி்ப்பாளர், ஆழி பதிப்பகம்