Archive for January, 2007

தமிழகத்தின் வெற்றிகரமான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள்

தமிழ்நாட்டில் வழக்கமாக விவசாயமோ வேறு குடும்பத் தொழிலிலோ அலுவலக வேலையிலோ ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு தொழில்முனைவோர் உருவாவது அவ்வளவு சுலபமல்ல. இங்கே தொழில்முனைவோர் என்று நான் சொல்வது தொழில் தொடங்குகிற அத்தனை பேரையும் அல்ல. தொழிலதிபராக வளர்ந்து, ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனை புரிந்து, நிறுவனமயப்படுத்தப்பட்ட பிஸினஸை செய்பவர்களை மட்டுமே. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் நேற்றைய/இன்றைய வெற்றிகரமான முதல் தலைமுறைத் தொழில்முனைவோர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்பது என் நீண்டநாள் அவா. ஒருவகையில் அதில் சுயநலமும் இருக்கிறது.

நானும் ஒரு முதல் தலைமுறைத் தொழில்முனைவோன்தான். எனது தாத்தா காலம் வரை எங்கள் மூதாதையர்கள் பரம ஏழையான நெசவாளர்கள். எனது அப்பா நெசவுத் தொழில் செய்துகொண்டே படித்து, வித்துவான் பட்டம் வாங்கி, ஆசிரியாக ஆனவர். அவர் ஓய்வு பெறும்போது தலைமையாசிரியராக இருந்தார். என் அம்மா அஞ்சாங்கிளாஸ். எனது சொந்தத்தில் யாரும் பிஸினஸ் கிடையாது. தூரத்து சொந்தங்களில் சில வியாபாரிகள் உண்டு.  நான் ஒரு நல்ல டாக்டராகவோ பொறியாளராகவோ அல்லது அதிகாரியாகவோ ஆகவேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. கொஞ்சகாலம் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் வேலை செய்த நான், பிறகு ‘தொழில்முனைப்பு பூச்சிக் கடித்து’, பிஸினஸ் தொடங்கினேன்.  என் வாழ்க்கைத்துணைவியாரின் ஒரே ஆதரவைத் தவிர, எனக்கு வெளிப்படையான, மனப்பூர்வமான ஆதரவு என் சுற்றத்தில் யாருமில்லை. நாற்பது, அம்பதாயிரம் சம்பளம் வாங்க வேண்டிய புள்ளை, பிஸினஸ், அது இதுன்னு வாழ்க்கையை வீணாக்குகிறான் என்கிறார்கள் சிலர். மாட்டை மேய்த்தோமா, கோலைப் போட்டாமா என்றில்லாமல் இது என்ன வேலை என்கிறார் ஒருவர். டிரைவர்களெல்லாம் பஸ் ஓனர்களாக ஆக முயற்சிக்கக்கூடாது என்கிறார் என் அப்பா. இவ்வளவு வருஷம் ஆச்சு, பிஸினஸ் உனக்கு சரிப்பட்டு வராது, ஒழுங்கா வேலைக்குப் போ என்று அறிவுரைக்கும் நலன்விரும்பிகள். இவர்களைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவி்ல் ஒரு பாட்டுக்குள் பணக்காரனாகும் வித்தை எனக்குத் தெரியவில்லை என்பதே ஆதங்கம். இதற்கிடையில் நாலஞ்சு வென்ட்ச்சர்களைத் தொடங்கி, அடிபட்டு, சற்றே தேறி, இப்போது ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தை நடத்திவருகிறேன். ஆழி என்ற பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கியிருக்கிறேன்.

 இன்று வெற்றிகரமாக பிஸினஸில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் என்னை விட நிறைய கஷ்டங்களை அனுபதித்திருக்கிறார்கள்.  நிறைய rags to riches கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கான ஒரு வழி தான் புத்தகம் எழுதுவது. இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற ஆசையை இப்போது நடைமுறைப்படுத்த விரும்புகிறேன்.

 ஆனால் இதில் உங்கள் உதவியும் தேவை

- நீங்களும் ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

- அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் அப்படி இருந்தால் அறிமுகப்படுத்துங்கள்

- நீங்கள் வியந்து போற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் – இன்றைய வெற்றிகரமான தொழிலதிபர்கள் – அவர்கள் பிரபலமானவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டாயமி்ல்லை- குறித்து டிப்ஸ் கொடுங்கள். அவர்களையெல்லாம் சந்தித்து உரையாடி, வலுவான தகவல் புலத்துடனும் அறிவுச் செல்வத்துடனும் அந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.

கை கொடுங்களேன்!

Comments (7)

தமிழ்க்கொடி 2006 – ஆண்டுத்தொகுப்பு

January 8, 2007
தமிழ்க்கொடி 2006
 
தமிழ்க்கொடி 2006 – இது ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆண்டுத்தொகுப்பு.

இந்த தொகுப்பு இப்போது சென்னைப் புத்தகக்காட்சியில் காலச்சுவடு, பாரதி புத்தகாலயம், புன்னகை, சிலிக்குயில், ஞானபாநு, வம்சி புக்ஸ், சாஃப்ட்வியூ போன்ற ஸ்டால்களில் கிடைக்கிறது.

 தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, அமெரிக்கா, கனடா,  பிரான்ஸ்,  சுவிஸ்,  ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,  மலேசியா,  வளைகுடா நாடுகள் ஆகிய இடங்களில் இருந்து 40 எழுத்தாளர்களின் இதில் எழுதியிருக்கிறார்கள்.
அரசியல், சமூகம், பண்பாடு, புலம்பெயர் வாழ்க்கை, பொருளாதாரம், கலை, இலக்கியம், ஊடகம் என விரிந்த பரப்பில், 2006 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் போக்குகளையும் ஆழமாகவும், விரிவாகவும் அலசும் / பிரதிபலிக்கும் கட்டுரைகளும் நேர்காணல்களும் இதில் இடம் பெற்றுருக்கின்றன.

இந்த தொகுப்பு பற்றிய விவாதங்களுக்காகவும் பின்னூட்டங்களுக்காகவும் tamilkodi2006.wordpress.com என்ற வலைப்பதிவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  இந்த நூலை நீங்கள் வாங்கிப் படித்த பிறகு அதில் உங்கள் பின்னூட்டங்களை அளியுங்கள்.  நூலை வாங்க, எனக்கு மடலிடுங்கள் (zsenthil@gmail.com).

இந்த ஆண்டுத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளவை:

சிறப்புக்கட்டுரைகள்
 01. அ. மார்க்ஸ்
  வெற்றிபெற்றவர்களும் தோல்வியடைந்தவர்களும்

 02. வ.கீதா
  தமிழ்ச்சூழலில் அறிவியக்கம்

 03. பா.ரா.சுப்பிரமணியன்
  சொற்களஞ்சியத்திற்குப் பயன்படுத்த வேண்டிய ஆதாரம்
 
நேர்காணல்
 04. பாமா
  மனிதநேயம் செத்துக் கொண்டிருக்கிறது

 05. சுப.வீரபாண்டியன்
  திராவிடத்தை எதிர்க்கும் தமிழ் தேசியம் ஆபத்தானது

 06. ரவிக்குமார்
  தலித் அரசியல்: போராட்ட அரசியலிலிருந்து  ஆக்கபூர்வ அரசியலுக்கு
 
 07. காஞ்சனா தாமோதரன்
  நம்மை வளர்த்த சமூகங்களுக்குத்
  திரும்பிச் செய்ய வேண்டும்

தமிழ்கூறும் நல்லுலகு
 
 08. கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்)
  எட்டுத்திக்கும் மதயானைகள்
 
 09. ஜமாலன் (வளைகுடா நாடுகள்)
  பணம் தேடிச்செல்லும் பாய்மரங்கள்
 
 10. லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா)
  தமிழ் அவுஸ்திரேலியர்கள் இன்று
 
 11. மணி மு.மணிவண்ணன் (அமெரிக்கா)
  தமிழ் அமெரிக்கர்கள் வாழ்வில் திருப்புமுனை?
 
 12. றஞ்சி (சுவிஸ்)
  பெயர்ந்த புலத்திலும் பெண்கள்
 
 13. ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)
  சிக்கல் இல்லாமல் தொடரும் வாழ்க்கை
 
 14. ரெ.கார்த்திகேசு (மலேசியா)
  தோட்டம் விட்டு
 
 15. வ.ந.கிரிதரன் (கனடா)
  மெதுவான முன்னேற்றம்
 
 16. துரைமடன் (ஈழம்)
  அரசியல் திசைப்போக்கும் அடையாள எழுச்சியும்
 
அரசியல் – சமூகம்

 17. புனித பாண்டியன்
  தமிழர் மலத்தை தமிழர் அள்ளும் அரசியல்

 18. ஞாநி
  தமிழக அரசியல்: யாருக்கு ஏற்றம்? யாருக்கு இறக்கம்?

 19. ச.தமிழ்ச்செல்வன்
  எதிர்மறைச் சமூகம்

 20. ப.சு. அஜிதா
  பெண்கள் குறித்த சட்டங்களும், தீர்ப்புகளும்

 21. பாரதிபாலன்
  தரமான கல்வியைத் தேடி

 22. செ.ச.செந்தில்நாதன்
  உலகமயமாதல் எனக்கு, உலகபயமாதல் உனக்கு…

 23. சுசி திருஞானம்
  தலைமை தாங்கட்டும் தமிழகம்

இலக்கியம்
 24. ஸ்ரீநேசன்
  கவித்துவத்தின் எல்லை

 25. ஜீ.முருகன்
  வரிகளும் வார்த்தைகளும்…

 26. எம்.கோபாலகிருஷ்ணன்
  நாவல் என்னும் பெருவழிப்பாதை

 27. பாவண்ணன்
  தொடரும் பயணத்தின் இடையில்

 28. அரவிந்தன்
  சலனங்களும் சவால்களும்

 29. அழகிய பெரியவன்
  தலித் உரைநடை

 30. அ.சதீஷ்
  காலம் கண்ணாடி முன் நிர்வாணமாய் நிற்கிறது

 31. ஆ.தனஞ்செயன்
  தனித்துவமான கல்விப்புலச்சிறப்புடன்

 32. லதா ராமகிருஷ்ணன்
  கவிதைசார் போக்குகள்
கலை
 33. சி.மோகன்
  சலனங்களும் சஞ்சாரங்களும்

 34. சி.அண்ணாமலை
  சுழல்வெளி
 
 35. க்ருஷாங்கினி
  முற்றிலுமான புதுமை சாத்தியமா?

ஊடகம்
 36. அ.ராமசாமி
  சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்

 37. செழியன்
  நமது தமிழ்ப்படம்

 38. தங்க. ஜெய்சக்திவேல்
  அலைகள் ஓய்வதில்லை

 39. மா. சிவக்குமார்
  வலைத்தமிழின் அடுத்த வீச்சு

 40. நிழல் ப.திருநாவுக்கரசு
  கைப்பிடிக்குள் கனவு

Comments (2)